சிறக்கடிக்க ஆசை சீரியலில் இப்போது விஜயா நினைத்தபடி முத்து மீனா இருவருக்கும் இடையில் சண்டை வந்துவிட்டது. இதை சந்தோஷமாக விஜயா தன் தோழி பார்வதியிடம் சொல்லுகிறார். இன்னொரு பக்கம் தான் செய்த அனைத்து பித்தலாட்டங்களையும் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் ரோகிணி மீனாவை வாய்க்கு வந்தபடி பேசுகிறார். இப்படி இருக்கையில் இந்த சீரியலின் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது பார்லரை ரோகிணி விற்ற விஷயம் தெரிந்தும் முத்து வீட்டில் எதுவும் சொல்லாமல் இருக்கிறார். இன்னொரு பக்கம் ரோகிணி சிட்டியிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி இருக்கையில் ரோகிணியால் வட்டி பணத்தை கட்ட முடியாதாம். பார்லரை வைத்து தான் ரோகிணி சிட்டியிடம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் ரோகிணி பார்லரை வேறு ஒருவரிடம் விற்ற விஷயம் தெரிந்து சிட்டி அவரை அசிங்கப்படுத்துவாராம். அந்த நேரத்தில் செல்வம் வந்துவிட அப்போதுதான் ரோகிணி சிட்டியிடம் கடன் வாங்கி உள்ளார் என்ற விஷயம் தெரியுமாம். மேலும் இந்த விஷயத்தை உடனே முத்துவிடம் சொல்வாராம். உடனே முத்து இதுக்கு மேலேயும் இவர் செய்ற பித்தலாட்டத்தை வீட்டில் சொல்லாமல் இருக்க முடியாது என நினைப்பாராம். மேலும் வீட்டில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டு ரோகிணி பார்லரை விற்ற விஷயத்தையும், சிட்டியிடம் கடன் வாங்கின விஷயத்தையும் சொல்லிவிடுவாராம். இதனால் ரோகிணி விஜயாவிடம் வசமாக சிக்குவாராம்.
”இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48”., இலவச சிகிச்சை தொகை உயர்வு., அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!