கொரோனா வைரஸின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் எல்லாம் மூடப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அனைத்து படங்களின் ஷுட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சிம்புவின் மாநாடு பட ஷுட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சிம்புவை வைத்து மீம்கள் இணையதளத்தில் வெளியாகி வருவதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் பதிலடி கொடுத்துள்ளார்.
மாநாடு ஷூட்டிங்
வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் ஹூட்டிங் சென்ற மாதம் தொடங்கியது. மாநாடு படத்தில் வில்லனாக எஸ்ஜே சூர்யா நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்த நிலையில் அதில் சிம்பு பங்கேற்க மறந்து விட்டார் என வதந்திகள் பரவின.
தயாரிப்பாளர் பதிலடி..!
இதை குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதாவது சிம்பு முன்பு போல் இல்லை நேரத்திற்கு வந்து அனைத்து காட்சிகளிலும் நடித்து கொடுத்திருக்கிறார். அவர் வராமல் எப்படி ஷுட்டிங் நடக்கும் என்று பதிலடி கொடுத்துள்ளார். கொரோனா காரணமாக ஷூட்டிங் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது வெளிவந்த மீம்களில் மாநாடு நிறுத்தப்பட்டதால் சிம்பு மகிழ்ச்சியில் ஆடுவது போலவும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சோகத்துடன் அமர்ந்திருப்பது போலவும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அது வைரலான நிலையில் தயாரிப்பாளர் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
சிம்பு வருத்தம்..!
முதலில் ஷூட்டிங் நிறுத்தியதால் வருத்தப்பட்டது சிம்பு தான் உழைப்பாளிகளின் பாதுகாப்பு முக்கியம் என கருதினார் என கூறியுள்ளார். மேலும் கிரேன் விழுந்து எங்கள் சகோதரர்களை இழந்ததையே எங்களால் இன்னமும் மறக்க இயலவில்லை தற்போது இந்த கொரோனவுக்கா இடம் கொடுப்போம்? என்று கேட்டுள்ளார் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |