TNUSRB எஸ்.ஐ தேர்வில் முறைகேடா..? ஒரே மாவட்டத்தில் 100 பேர் அடுத்தடுத்து தேர்வானதால் சர்ச்சை..!

0

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக தற்போது புகார்கள் எழுந்து உள்ளன.

இரண்டு பிரிவாக தேர்வு:

TNUSRB நடத்திய உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வானது பொதுப்பிரிவினர் மற்றும் காவல் துறையில் பணிபுரிபவர்கள் என இரண்டு பிரிவாக தேர்வு நடத்தப்பட்டது. இதில் பொதுப்பிரிவில் மட்டும் 1,34,000 பேர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் இந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தற்போது புகார்கள் எழுந்துள்ளன.

அடுத்தடுத்து 100 பேர்:

நேற்று வெளியிடப்பட்ட எஸ்.ஐ தேர்வு முடிவுகளில் பொதுப்பிரிவில் வேலூர் மாவட்டத்தில் தேர்வெழுதிய அடுத்தடுத்த வரிசை இலக்க எண்களைக் கொண்ட 100 பேர் தேர்வாகி உள்ளனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதுமட்டுமில்லால் மதுரவாயிலில் ஒரே தேர்வு மையத்தில் எழுதிய காவல் துறையினரைச் சேர்ந்த 6 பேர் முதல் 10 இடத்திற்குள் வந்திருப்பதும் சந்தேகத்தை கிளப்பி உள்ளது. எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வருமாறு தேர்வர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here