14  இன்னிங்ஸ்களில் இத்தனை அரைசதங்களா?? தொடர்ந்து அசத்தும் ஷ்ரேயாஸ் ஐயர்!!  

0
14  இன்னிங்ஸ்களில் இத்தனை அரைசதங்களா?? தொடர்ந்து அசத்தும் ஷ்ரேயாஸ் ஐயர்!!  

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று (டிசம்பர் 17) நடைபெற்றது. இதில் இந்திய அணியினர் சிறப்பாக செயல்பட்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தன்வசப்படுத்தினர். முன்னதாக இப்போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் 43 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி,1 சிக்ஸர் உட்பட 52 ரன்கள் விளாசினார்.

இந்த ஒரு போட்டியில் மட்டும் இவர்  சிறப்பாக விளையாடவில்லை. இவர் களமிறங்கிய 14 இன்னிங்ஸ்களில்  தனது 7வது அரை சதத்தை பதிவு செய்தார். இயல்பாகவே இவருக்கு இந்திய அணியில் கிடைக்கும் வாய்ப்பு குறைவுதான். அந்தக் குறைவான வாய்ப்பிலும் தனது முழு திறமையை நிரூபித்து அசத்தி வருகிறார். நேற்றைய போட்டியில் மூன்றாவது இடத்தில் களம் இறங்கியதால் இனி இவர்தான் அடுத்த விராட் கோலி என்ற கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் உலா வர  தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here