குடிபோதையில் பிரியாணி சாப்பிட்ட குறும்பட இயக்குனர் உயிரிழப்பு- சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0

பல குறும்படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் நேற்று சென்னையில் திடீரென உயிரிழந்துள்ளார் .மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

குறும்பட இயக்குனர் ரஞ்சித்:

சென்னை வியாசர்பாடியில் உள்ள ரத்தினம் தெருவை சேர்ந்த குறும்பட இயக்குனர் ரஞ்சித். 22 வயதான இவர் தனியார் கல்லூரியில் விஸ்காம் படித்து முடித்து உள்ளார். மேலும் சில குறும்படங்களை இயக்கி வந்த இவர் சினிமாவில் பட வாய்ப்புகளுக்காக காத்து இருந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு மது அருந்தி போதையில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட ஒரு சில மணி நேரத்திலேயே ரஞ்சித் மயங்கமடைந்து உள்ளார்.

இதனால் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் போலீசார் ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு தற்போது அனுப்பியுள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் எனவும் கூறியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here