இரண்டாவது நாளாக சரிவுடன் தொடங்கிய பங்குசந்தை – இன்றைய நிலவரம்!!

0

பங்குச்சந்தை வணிகம் இன்று காலை தொடங்கியுள்ள நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இன்றும் தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.

பங்குச்சந்தை:

நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் அனைத்து தரப்பு வணிகமும் தற்போது சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இதனால் பங்குசந்தை நிலவரம் ஏற்றம் இரக்கத்தை கண்டு வருகிறது. மேலும் வரும் நாட்களில் இந்திய பொருளாதாரம் அபார வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுறது. தற்போது இன்றைய நிலவரப்படி பங்குச்சந்தை புள்ளிகளின் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பங்குச்சந்தை வணிகம் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் தொடங்கியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் புள்ளிகளில் 425 புள்ளிகள் குறைந்து 50,420 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இது மொத்த வர்த்தகத்தில் 0.41 சதவீதம் சரிவாகும். மேலும் தேசிய பங்குச்சந்தை குறியீடு எண் நிஃப்டி 54 புள்ளிகள் சரிந்து 19,964 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியது. இது மொத்த வர்த்தகத்தில் 0.37 சதவீத சரிவாகும்.

‘இனி லேப்டாபில் வீடியோ கால் செய்துகொள்ளலாம்’ – வாட்ஸ் ஆப் நியூ அப்டேட்!!

மேலும் சென்செக்ஸ் புள்ளி பட்டியலிலுள்ள முதல் 30 பங்குகளில் 11 நிறுவனத்தின் பங்குகள் மட்டுமே உயர்ந்து காணப்படுகிறது. அதில் அதிகபட்சமாக இண்டஸ் இந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ வங்கி ஆகியவற்றின் பங்குகள் சரிவாக காணப்பட்டது. மேலும் ஓ.என்.ஜி.சி பங்குகள் 3.28 சதவீதமும், அல்ட்ரா டேக் சிமெண்ட் 2.19 சதவீதமும் மற்றும் எம்&எம் நிறுவனத்தின் பங்கு 1.55 சதவீதமும் உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here