தனத்திற்கு எதிராக முல்லையை தூண்டி விடும் பார்வதி – பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு ஏற்படும் சிக்கல்!!

0

முல்லையை பார்க்க வீட்டிற்கு வரும் அவரது அம்மா பார்வதி தனத்திற்கு எதிராக முல்லையை தூண்டி விடுகிறார். முல்லை மட்டுமே அந்த வீட்டில் வேலை செய்வதாகவும் மற்ற எல்லோரும் ரெஸ்ட் எடுப்பதாகவும் குற்றம் கூறுகிறார் பார்வதி.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர்

இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் பார்வதிக்கு இருதயத்தில் பிரச்சனைகள் இருக்கிறது, மூர்த்தி மாமா தான் ஆபரேஷன் செலவு செய்ய போறாங்க என மீனா அவர் அம்மாவிடம் கூறுகிறார். இதெல்லாம் ரொம்ப தப்பு, உனக்கு மட்டும் செலவு பண்ண மாற்றாங்க என மூர்த்தி வீட்டை பற்றி குறை கூறுகிறார் மீனாவின் அம்மா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சூப்பர் மார்க்கெட் கட்ட பணம் இல்லை, ஆபரேஷன் செலவுக்கு மட்டும் பணம் இருக்கிறதோ அவங்களுக்கு என மீனாவை ஏத்தி விடுகிறார் மீனாவின் அம்மா. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் கட்டுவதற்கு கதிர் நிறைய பில்டிங் மாடல் வைத்திருப்பதாக மூர்த்தியிடம் கூறுகிறார் ஜீவா.

அங்கு வரும் ஜனார்த்தனன் பணம் தேவைப்பட்டால் என்கிட்ட கேளுங்க, என்று கூறி தந்திரமான யோசனை ஒன்றை சொல்லுகிறார். ஸ்டோர் கட்டப்போகும் இடத்தை நான் வாங்கி, இந்த இடத்தை உங்களுக்கே லீசுக்கு விட்டுறேன் என ஜனார்த்தனன் ஆலோசனை கூறுகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களின் பட்டியல் – மார்ச் 10இல் வெளியீடு!!

இந்த இடத்தை நாங்க எங்க சொந்த செலவுல கட்டிக்கிறோம் என மூர்த்தி உறுதியாக கூறுகிறார். வீட்டில் சமையல் செய்துகொண்டிருக்கும் முல்லையிடம், வீட்டில் இத்தனை பேர் இருக்காங்க, நீ மட்டும் தனியா எல்லா வேலையும் செய்யுற என புலம்புகிறார் பார்வதி. தனம் வீட்டில் வேலை செய்வதில்லை என திரும்ப திரும்ப குத்தி காட்டுகிறார் பார்வதி.

சமையலில் முந்திரி பருப்பு போடுவதற்கு கூட தனத்திடம் கேட்க வேண்டுமா என தனத்தைப்பற்றி முல்லையிடம் கோள்மூட்டுகிறார். வீட்டுக்கு கிளம்பும் பார்வதியிடம், சொல்லிட்டு போங்க என முல்லை சொல்ல, எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க, அவங்ககிட்ட ஏன் சொல்லிட்டு போகணும் என்று கூறிவிட்டு கிளம்புகிறார் பார்வதி.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கு வருகிறார் தனம். உடம்புக்கு முடியல சித்தி அது தான் நல்லா தூங்கிட்டேன் என தனம் கூறுகிறார். முந்திரி பருப்பு எங்க இருக்கு என தனத்திடம் கேட்ட முல்லை அதை எடுக்க சென்ற பின்பு, அலமாரி சாவியை கூட முல்லையிடம் கொடுக்க மாட்டியா, அவ மேல நம்பிக்கை இல்லையோ என தனத்திடம் கேட்கிறார் பார்வதி. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here