எனது பெயரில் பெரிய மோசடி நடக்கிறது – ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சாந்தனு!!

0

தனது பெயரில் போலியான கணக்கு ஒன்றை உருவாக்கி மக்களிடையே சில மோசடி வேலைகள் நடைபெற்று கொண்டிருப்பதாக நடிகர் சாந்தனு குற்றம் சாட்டியுள்ளார். இதனால் எனது பெயரில் இருக்கும் போலியான கணக்குகளை யாரும் நம்பிவிட வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சாந்தனுவின் பதிவு:

சமூக வலை பக்கங்களில் பிரபலங்களின் பெயரில் அதிகமாக போலியான கணக்குகள் உருவாகி வருவது வழக்கமாகிவிட்டது. இதில் பலரும் அவர்களின் பெயரை தவறாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சாந்தனு, தனது பெயரில் போலியான கணக்கு ஒன்று உருவாக்கியுள்ளதாகவும், இவரது பெயரை வைத்து ஏமாற்ற முயற்சித்து வருவதாகவும் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இதே போல எனது பெயரில் உள்ள கணக்குகளை யாரும் நம்பிவிட வேண்டாம் என தனது நண்பர்கள் மற்றும் திரை பிரபலங்களை எச்சரித்துள்ளார். இதனை சாந்தனு தனது வலை பக்கத்தில், என் பெயரை தவறாக பயன்படுத்தி, சமீப காலமாக திரையுலக நண்பர்களிடம் என் குடும்பத்தில் ஒருவர் போல் பேசி ஏமாற்றி வருகின்றனர். இதனால் யாரும் சமூக வலை பக்கங்களை நம்பி எளிதில் ஏமாந்துவிட வேண்டாம் என கூறி எச்சரித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here