இந்திய வீரர், வீராங்கனைகள் அனைவரும் இப்போது அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பதக்கங்களையும், விருதுகளையும் குவித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். தற்போது கூட ஜப்பானில் கோல்டன் கிராண்ட் பிரிக்ஸ் என்ற இடத்தில் தடகள போட்டி நடைபெற்று வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த தடகள போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரமங்கை ஷைலி சிங் கலந்து கொண்டார். இவர் இந்த போட்டியில் ஜெர்மனி வீராங்கனை மரைஸ் லூஸியோ, ஆஸ்திரேலிய வீராங்கனை ப்ரூக் ஆகியோருடன் போட்டியிட்டு 6.65 மீ தூரம் தாண்டி மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.
RCB தோல்வியை குத்தாட்டம் போட்டு கொண்டாடிய மும்பை இந்தியன்ஸ்…, வைரலாகும் வீடியோ உள்ளே!!
இவர் இதுவரை கலந்து கொண்ட போட்டியில் இது தான் அதிகபட்ச தூரம் என்று சொல்லப்படுகிறது. இதில் மரைஸ் லூஸியா 6.79 மீ தூரம் தாண்டி தங்கப் பதக்கத்தையும், ப்ரூக் 6.77 மீ தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும் வென்று தங்கள் நாட்டிற்கு பெருமை சேர்ந்துள்ளனர்.