தற்போது வெள்ளித்திரையை விட, சின்னத்திரை நடிகைகளுக்கு மக்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர், ஏனெனில் படங்களில் இருக்கும் காட்சிகளும் தற்போது சீரியல்களில் இடம் பெறுகின்றன. இதனாலேயே சின்னத்திரை நடிகைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஒருவர் தான் சைத்ரா ரெட்டி. தற்போது இவருக்கு திருமணம் ஆகவுள்ள நிலையில் மெகந்தி நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
சைத்ரா ரெட்டி
சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்ற கருத்து சில வருடங்களாக இருந்தது. யாரிடம் கேட்டாலும் சன் டிவி சீரியலை தான் பெருமையாக பேசி வந்தனர். அந்த சேனலுக்கு போட்டியாக தற்போது பல சேனல்கள் களமிறங்கியுள்ளது. விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் என பல சேனல்கள் உள்ளன. ஆனாலும் சன் டிவிக்கு அடுத்ததாக உள்ளது விஜய் டிவி.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த விஜய் டிவிக்கு முக்கிய போட்டியாளராக இருப்பது ஜீ தமிழ் தான், விஜய் டிவி போலவே பல சீரியல்களை ஜீ தமிழ் தந்துள்ளது. அந்த சேனலில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ‘யாரடி நீ மோகினி’. இந்த சீரியலில் வில்லியாக நடித்தவர் தான் சைத்ரா ரெட்டி.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இவரும் ஆரம்பத்தில் விஜய் டிவியில் நடித்தவர் தான். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் ஜீ தமிழுக்கு தாவினார். அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தியும் கொண்டார். இப்படி ஒரு வில்லியா?? என்ற ரேஞ்சுக்கு பட்டையை கிளப்பினார். இது வரையிலும் வெள்ளித்திரையில் கூட இப்படி ஒரு வில்லியை பார்த்திருக்க மாட்டோம்.
பார்ப்பவர்கள் அனைவரையும் கதிகலங்க செய்தார். ஆனால் அவர் நிஜ வாழ்க்கையில் மிகவும் அன்பானவராம். இதனை பலரும் கூறி வந்தனர். இப்பொழுது தான் வில்லிகள் கூட அழகாக தானே எடுக்கிறார்கள். இவர் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றவர். இந்நிலையில் அவருக்கு திருமணம் ஆகயுள்ளது.
இவர்களின் நிச்சய புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் அவர் மெகந்தி நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தன் தோழிகளுடன் செய்த பல ரகளைகளும் இடம் பெற்றுள்ளது.
Congratulations