தமிழகத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், காவேரி மருத்துவமனையில் பைபாஸ் சர்ஜரி மேற்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீதிபதிகள் நீட்டித்துள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில் செந்தில் பாலாஜியை விடுவிக்க அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி உள்ளனர். அதாவது நீதிபதி நிஷா பானு கூறுகையில், “சட்டத்திற்கு புறம்பாக செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளதால், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்.” என உத்தரவிட்டுள்ளார்.
மறுபுறம் நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறுகையில், “செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை முடிந்த 10 நாட்களுக்குள் சிறையில் அடைக்க வேண்டும்.” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளார். இரண்டு நீதிபதிகளின் தீர்ப்புகள் மாறுபட்டு இருப்பதால், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரணை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.