தமிழகத்தில் மிக்ஜம் புயல் காரணமாக கடந்த டிசம்பர் 4ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புயல் கரையை கடந்துள்ள போதிலும் மிக்ஜாம் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய தாலுகாவில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.