கடந்த 10 தினங்களுக்கு முன்பாகவே “மிக்ஜாம்” புயல் எச்சரிக்கை விடப்பட்டு இருந்ததால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ரூ.4,000 கோடி செலவில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டது. இருந்தாலும் புயல் ஓய்ந்து 3 தினங்களாகியும் வடிகால் அமைத்த பகுதிகளில் தண்ணீர் வெளியேறாமல் உள்ளதாக பலரும் புகார் தெரிவித்து வருவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த புயல் அண்மைக்காலமாக இல்லாத அளவுக்கு பொருள் சேதங்களையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே சென்னையில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் தலா ரூ.10,000 நிதி உதவியை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
TNPSC தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு சிறப்பு சலுகை.., உடனே கிளிக் பண்ணுங்க!!