தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு விரைவில் நடைபெற இருப்பதால் பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் வாரிய தேர்வுகள் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி ஒற்றை ஷிப்ட் மாணவர்களுக்கு காலை 8 மணி முதல் மதியம் 02.30 மணி வரையிலும், இரட்டை ஷிப்ட் மாணவர்களுக்கு காலை 7 to 12.30 மற்றும் மதியம் 12.45 to 06.16 வரையிலும் பள்ளிகள் செயல்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நேர மாற்றம் பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.