உலக மக்கள் தொகையில் எப்போதும் சீனா தான் முதலிடத்தை தக்கவைத்து கொள்ளும். ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் தொகை கணிசமாக குறைந்துவிட்டது. இதனால் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித்திருக்கிறது.இது ஒரு புறம் இருந்தாலும் மக்கள் தொகையை அதிகரிக்க தென் கொரியா நிர்வாகம் புதிதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது ஊழியர்கள் குழந்தை பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு ரூபாய் 62 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தென் கொரியாவை சேர்ந்த புயங் குரூப் என்ற தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில் இத்திட்டத்தை அமல் படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.