தேர்தல் எதிரொலி.. பள்ளிக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு?? வெளியான முக்கிய தகவல்!!

0
தேர்தல் எதிரொலி.. பள்ளிக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு?? வெளியான முக்கிய தகவல்!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வருகிற  ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி முதல் 7 கட்டமாக நடைபெற இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் பணிக்கான பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையங்கள் விரைந்து மேற்கொண்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன் பின்னர் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதால், பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை குறித்த கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு., இந்த நேரத்தில் தான்? தேர்தல் ஆணையம் அரசாணை!!!

வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை முடிவடைந்து, ஜூன் 1ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும். இம்முறை வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற இருப்பதால், ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டை போல, நடப்பாண்டிலும் கோடை விடுமுறை நீட்டிக்கப்படுமா? என மாணவர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here