நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் வாக்குப்பதிவுக்கான நேரங்களை அரசாணையாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளனர்.
TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்., இனி இதுக்காக அலைய தேவையில்லை? தேர்ச்சி பெற இது போதும்?
அதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிகளிலும் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதேபோல் மணிப்பூர், மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஒரு சில தொகுதிகளில் மாலை 3 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெறும் என குறிப்பிட்டுள்ளனர்.