வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அனைத்து விதமான தேர்தல் பணிகளையும் விரைந்து மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஒட்டு சாவடி அலுவலர்களாக பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்து மூன்று கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தேர்தல் எதிரொலி.. பள்ளிக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு?? வெளியான முக்கிய தகவல்!!
இந்த சூழலில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் சிலர் போலி மருத்துவ சான்றிதழ்களை கொடுத்து, தேர்தல் பணியில் இருந்து விலக்கு தருமாறு மாவட்ட கல்வி அதிகாரியிடம் விண்ணப்பித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இதையடுத்து போலி காரணங்களுடன் தேர்தல் பணியை புறக்கணிக்கும் ஆசிரியர்களுக்கு, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.