நாடு முழுவதும் பள்ளி மாணவர்கள், தங்களது கல்வி படிப்பை இடைநிற்றல் இல்லாமல் தொடர வேண்டும் என பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு NMMS திறனறிவு தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசு நடத்தி வருகிறது. இந்த தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நடப்பாண்டுக்கான NMMS தேர்வு, வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதால், பெரும்பாலான மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு, கூடுதல் அவகாசமாக ஜனவரி 31ம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளனர். இதற்கான விண்ணப்பத்தை கல்வித்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
ரேஷன் அட்டைதாரர்களே…, இனி கோதுமைக்கு பதிலாக மாவு பைகள்…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!