தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு பல கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். மேலும் தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர்கள் நிரந்தர பணி, ஊதிய உயர்வு போன்ற பல அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வைத்துள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க தமிழக அரசு பள்ளிகளில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-24 ஆம் கல்வியாண்டில் கிட்டத்தட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.
ஆனால் இதில் ஒரு சில பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் தற்போது இந்த உபரி ஆசிரியர் காலி பணியிடங்களை ஆய்வு செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 2023-24 ஆம் கல்வியாண்டில் நிரப்பப்படாமல் உள்ள உபரி பணியிடங்கள் வரும் கல்வியாண்டில் காலி பணியிடமாக கருதப்படாது என குறிப்பிட்டுள்ளனர். இதனால் இந்த உபரி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.