ரேஷன் அட்டைதாரர்களே…, இனி கோதுமைக்கு பதிலாக மாவு பைகள்…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
இந்தியாவின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்பட்டு வரும் பொருட்கள் பஞ்சாப் மாநிலத்தில் சரிவர ரேஷன் அட்டைதாரர்களுக்கு சென்றடையாமல் கள்ள சந்தையில் விற்கப்பட்டு வருவதாக பரவலான தகவல் வெளியானது.

இந்த முறைகேட்டை தவிர்க்கும் வகையில், அகில இந்திய நியாய விலைக்கடை டீலர்கள் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் கரம்ஜித் சிங் அடேசா அதிரடியான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். அதாவது, மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் 200 ரேஷன் கார்டுகளுக்கு மேல் வழங்கக் கூடாது எனவும், அதற்கு மீறி தேவைப்படும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஏற்ப, ரேஷன் டிப்போக்கள் அமைக்கப்பட்டு அதன் வாயிலாக பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், கோதுமைக்கு பதிலாக மாவு பைகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here