கொரோனா தாக்கத்தின் மூன்றாம் அலை குறித்த அச்சம் இருப்பதால் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளை திறக்கும்படி உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முக்கிய உத்தரவு:
தற்போது இந்தியாவில் குறைந்து வரும் தொற்றால் பள்ளிகள் திறப்பதில் அனைத்து மாநில அரசுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளை திறக்க உத்தரவிடக் கோரி டெல்லியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தின் மூன்றாம் அலை குறித்த அச்சம் இருப்பதால் பள்ளிகளை திறக்கும் படி அரசுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்தனர்.
இது மட்டுமல்லாமல், நிர்வாக விவகாரங்களில் முடிவெடுப்பதை அந்ததந்த மாநில அரசுகளிடம் விட்டுவிட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் படிக்கும் மாணவர்கள் அரசியல் தீர்வுகள் தேடுவதை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்தும் படி சம்பந்தப்பட்ட மாணவர்க்கு நீதிபதி அறிவுரை வழங்கி உள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்