தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவிலான தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு:
தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை தொடக்கத்தில் பள்ளி மாணவர்களிடையே மிக அதிகமான அளவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்தது. எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் 10 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு வெளிவந்த நிலையில் பெற்றோர்கள் மாணவர்களை உயர்கல்வி வகுப்பில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அதற்கு மதிப்பெண் சான்றிதழ் வேண்டும் என்பதால் அதனை தர கூறி பள்ளிகளில் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் தேர்வின்றி மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு வழங்கப்படவுள்ளது என்ற குழப்பம் அனைவரிடமும் இருந்து வந்தது.
கொரோனா பரவல் எதிரொலி – திரையரங்குகளில் தீவிர கட்டுப்பாடு!!
இந்நிலையில் தற்போது இதுகுறித்து ஓர் அறிக்கை வெளிவந்துள்ளது. அதன்படி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வினை நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு குறைந்த பட்ச மதிப்பெண் 35 என்ற நிலையில் தேர்வு நடைபெறும். 35 மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற விரும்பும் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.