கொரோனா பரவல் எதிரொலி – திரையரங்குகளில் தீவிர கட்டுப்பாடு!!

0

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் நூற்றுக்கணக்கில் பரவி வந்த கொரோனா நோய்த்தொற்று தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் பத்தாயிரம் வரை அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதேபோல் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த வாரம் முதல் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதில் கொரோனா தொற்று குறையாத காரணத்தினால் தற்போது கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் போன்றவற்றிற்கு தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி போட்டுகொண்டால் மூக்குத்தி, சோப்பு, தக்காளி, ஜூஸ் இலவசம் – மாநில அரசின் புதிய யுக்தி!!

திரையரங்குகளில் 50% இருக்கைகள், சமூக இடைவெளி, கிருமி நாசினி போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் பல அறிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினர். ஆலோசனையின் முடிவில் தமிழக அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் திரையரங்குகளில் பின்பற்றப்படும் என்று தெரிவித்தனர். மேலும் இந்த ஆலோசனையில் தங்களது கோரிக்கைகளை புதிய அரசு அமைந்தவுடன் முன்வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here