நாட்டில் தற்போது கொரோனா நோய்த்தொற்று அரசியல் தலைவர்களிடையே மிக அதிகமான அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி:
நாட்டில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளும் கொரோன தடுப்பூசி பணிகளும் மிக தீவிரமாக நாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கடந்த சில நாட்களாகவே நாட்டில் கொரோனா நோய்த்தொற்று அரசியல் தலைவர்களிடையே மிக அதிகமான அளவில் கண்டறியப்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அந்த வகையில் கேரளா முதல்வர், உத்திரபிரதேச முதல்வர் போன்றவர்களுக்கு சமீபத்தில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். நாட்டில் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சத்திற்கு அதிகமானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
After experiencing mild symptoms, I’ve just tested positive for COVID.
All those who’ve been in contact with me recently, please follow all safety protocols and stay safe.
— Rahul Gandhi (@RahulGandhi) April 20, 2021
கொரோனா தடுப்பூசி வீணாக்குவதில் தமிழகத்திற்கு முதலிடம் – ஆர்டிஐ அதிரடி அறிக்கை!!
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மூத்த பிரமுகருமான ராகுல் காந்திக்கு தற்போது கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதனை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் இருந்தவர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.