இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசும், முக்கிய பண்டிகைகளை பொதுமக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடுவதற்காக பொது மற்றும் உள்ளூர் விடுமுறைகளை அறிவிப்பது வழக்கம். மாநிலத்தில் மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு உள்ளூர் நிலைக்கு ஏற்பவும் பள்ளிகளுக்கு விடுமுறை அரசு அறிவித்து வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த வகையில், சீக்கியர்களின் புனிதமான பண்டிகைகளில் ஒன்றான குரு நானக் தேவ் ஜி குர்புரப் எனப்படும் குருநானக் ஜெயந்தி தெலுங்கானா மாநிலத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த குருநானக் ஜெயந்தி வரும் நவம்பர் 27ஆம் தேதி (திங்கட்கிழமை) அனுசரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தெலுங்கானா அரசு, அம்மாநிலத்தில் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.