இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா முதல் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கும் நிலையில் நாளை (நவம்பர் 26) இவ்விரு அணிகள் கேரளாவில் பலப்பரீட்சை செய்கின்றன. இதில் இந்தியா கடந்த ஆட்டத்தில் வென்ற உற்சாகத்துடன் களமிறங்க உள்ளது. அதே சமயம் ஆஸ்திரேலிய முக்கிய வெற்றிக்காக விளையாட இருக்கிறது.
Enewz Tamil WhatsApp Channel
இதற்கு முன் நடைபெற்ற ஒருநாள் தொடரில் காயம்பட்ட ஆஸ்திரேலியா அணி, இத்தொடரை வெல்லும் முனைப்பில் விளையாட இருப்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு அணி வீரர்களும் சிறப்பான பார்மில் உள்ளதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. இது வரை கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் 20 ஓவர் போட்டிகள் நடைபெற்று உள்ளன. அதில் முதல் பேட்டிங் செய்யும் அணி ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. சேசிங் செய்யும் அணி 2 முறை வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டி நாளை இரவு 7.00 மணிக்கு கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் துவங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் கேப்டன்சியில் மாற்றம்?? வெளியான முக்கிய தகவல்.!