தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்திரபிரதேசத்தில் ஆயுஷ்மான் அட்டைகள் மூலம் இலவச சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இன்று (நவம்பர் 25) கோரக்பூரில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில் அம்மாநில பிரதமர் யோகி ஆதித்யநாத் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது “மருத்துவ உதவி தேவைப்படும் அனைவருக்கும் ஆயுஷ்மான் அட்டை இல்லாமல் இருந்தாலும் கூட இலவச சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த செலவை அரசே ஏற்கும். அதேபோல் அவசர கால அடிப்படையில் அட்டை கோருவோர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளேன்.” என கூறியுள்ளார்.
தமிழக ரேஷன் அட்டைத்தாரர்களே…, இனி இந்த பொருளும் உங்களுக்கு கிடைக்கும்?? வெளியான முக்கிய தகவல்!!