தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தலைவர்கள் பிறந்தநாள் உட்பட பல்வேறு முக்கிய நிகழ்வுகளை அனுசரிக்கும் விதமாக பொது விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி (திங்கள்கிழமை) 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த துறவியான குரு நாபா தாஸின் பிறந்தநாள் அனுசரிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலக ஊழியர்களுக்கு, ஏப்ரல் 8ஆம் தேதி (நாளை மறுநாள்) விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு அம்மாநில மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
TNPSC Book Materials, Course Pack உள்ளிட்டவற்றை சலுகை விலையில் பெற இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.