கொரோனா தடை காலங்களில் அரசு மற்றும் தனியார் துறையின் கலிப்பாணியிடங்களுக்கான தேர்வுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. இதனால் தற்போது தடை நீங்கியதால் பல்வேறு போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். எனவே எப்படியாவது அரசு வேளைக்கு செல்ல வேண்டும் என்று குறுகிய பணியிடங்களுக்கு பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் உள்ள SBI வங்கிகளில் காலியாக உள்ள 5000க்கும் மேற்பட்ட கிளார்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டனர். இதில் 3 படிநிலைகள் மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர்.
EPFO பயனர்களே., இதுக்காக நீங்க அலைய வேணாம்! வீட்டில் இருந்து ஈஸியா செய்யும் வழிமுறைகள் இதோ!!
அந்த வகையில் அண்மையில் முதல்நிலைத் தேர்வு முடிவடைந்து தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளிவந்தது. இதை தொடர்ந்து தற்போது 2ம் படி நிலைக்கான முதன்மை தேர்வு ஜனவரி 15ம் தேதி நடைபெறும் என SBI அறிவித்துள்ளது. இதனால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் தினத்தன்று தேர்வு அறிவிக்கப்பட்டதால் தேர்வர்கள் முதன்மை தேர்வை மாற்றி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.