சவுதியில் கொரோனா தாக்கம் தீவிரம் – காலவரையின்றி ஊரடங்கு அமல்..!

0

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து சவுதி அரேபியாவில் ஊரடங்கு உத்தரவை காலவரையின்றி நீடிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

சவுதியில் அதிக பாதிப்பு..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் 59 உயிரிழப்புகளுடன் 4,462 நோய்த்தொற்றுகள் பதிவாகி உள்ளன.

22 ஆயிரம் சுகாதார ஊழியர்களை தாக்கிய கொரோனா – அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!

வளைகுடா நாடுகளில் சவுதியில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் மொத்தம் 14,100 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் 96 பேர் இறந்துள்ளனர்.

காலவரையின்றி ஊரடங்கு..!

நாடு முழுவதும் முதலில் 3 வாரங்கள் மட்டுமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டிந்தது. இந்நிலையில் சவுதியில் வரும் வாரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. எனவே ஊரடங்கு உத்தரவு தேதி குறிப்பிடப்படாமல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

முக்கிய பணியாளர்கள் மட்டும் வெளியில் செல்வதற்கு ஏதுவாக புதிய அனுமதிகள் வழங்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மூன்று பகுதிகளாக பிரிக்கப்படும் மாநிலங்கள் – 2 ஆம் கட்ட லாக்டவுன் திட்டம் என்ன?

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..!

இதையடுத்து, சர்வதேச பயணிகள் விமானங்களை சவுதி அரசு நிறுத்தியுள்ளது. ஆண்டு முழுவதும் உம்ரா யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பெரும்பாலான பொது இடங்களை மூடியுள்ளது மற்ற வளைகுடா நாடுகளும் இதே போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here