தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் 10ம் வகுப்பு பாடங்கள் – இந்திய அரசின் அசத்தல் திட்டம்..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் மாணவர்கள் படிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

பொதுத்தேர்விற்கு தயாராக..!

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்விற்கு தயாராகும் வகையில் படங்களை தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்ப இந்திய அரசு முடிவு செய்து உள்ளது. 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது சாத்தியமில்லை என அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனவே வீட்டிலுள்ள மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் ஆன்லைன் கிளாஸ் எடுத்து வருகின்றனர். அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என அரசு இந்த முயற்சியை எடுத்து உள்ளது.

அந்த வகையில் டிடி யாதகிரி தொலைக்காட்சியில் ஏப்ரல் 12 முதல் 23 ஆம் தேதி வரையில் காலை 10 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் 43% மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளும் அளவிற்கு வசதிகள் இல்லை என கூறப்பட்டு வந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here