சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது – விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!!

0

பெங்களூரு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் சசிகலாவிற்கு தற்போது உடல் நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

உடல்நிலையில் முன்னேற்றம்

கடந்த 20 ம் தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு தீடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. கொரோனா மட்டுமல்லாது தீவிர நுரையீரல் பிரச்சனை, சர்க்கரை நோய் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை – மத்திய அரசு அறிவிப்பு!!

தற்போது சசிகலா உடல்நிலை குறித்து விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்துள்ளது. அதில் ‘ சசிகலா ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 98% லிருந்து 97% க்கு குறைந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிசச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலை சீராக உள்ளது. அவரால் தற்போது சாப்பிடமுடிகிறது. மற்றவர்களின் உதவியுடன் நடக்க முடிகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு மட்டும் சற்று அதிகமாக இருப்பதால் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here