ரிஷப் பந்த் நீக்கம், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு – தொடங்கியது 3வது T20i போட்டி

0
Sanju Samson

இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகளைக் கொண்ட T20I தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே முதல் போட்டியானது மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் வென்றுள்ள இந்திய அணி நாளை புனேயில் நடைபெறும் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

சஞ்சு சாம்சன் இன், ரிஷப் பந்த் அவுட்

இந்த மூன்றாவது போட்டியில் குல்தீப் யாதவுக்கு பதிலாக சஹால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பந்த் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியைப் பொறுத்தவரை இஸ்ரூ உதனாவுக்கு பதில் ஏஞ்சலோ மாத்யூஸ் மற்றும் சந்தகன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளின் விபரம்

இந்தியா : ஷிகர் தவன், ராகுல், கோலி, ஸ்ரேயாஸ், சஞ்சு சாம்சன், மணீஷ் பாண்டே, சார்துல் தாகூர், யுஸ்வேந்திர சஹால், ஜஸ்பிரீத் பும்ரா, சாய்னி


இலங்கை : அவிஸ்கா பெர்னாண்டோ , குணதிலகா, குசல் பெரேரா, ஏஞ்சலோ மாத்யூஸ், ஒசாடா பெர்ணாண்டோ, தனஞ்சயா, சந்தகன், சானாகா, ஹசரங்கா, குமாரா, மலிங்கா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here