மாடலிங் துறையில் முதன் முதலில் கால் பதித்த சமந்தா தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பட்டையை கிளப்பி வருபவர் தற்போது சில மாதங்களாக படு கவர்ச்சியாக போட்டோஷூட் செய்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போதும் க்ளோசப்பில் போட்டோஷூட் செய்து வெளியிட்டுள்ளார்.
சமந்தா
தமிழில் மாஸ்கோவில் காவேரி படத்தின் மூலம் அறிமுகமானவர் சமந்தா. மாடலிங் துறையில் முதலில் களமிறங்கிய அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவே தமிழில் நடித்து வந்தார். மேலும் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார் சமந்தா. அதன் பிறகு அதர்வாவுடன் பானா காத்தாடி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
அதற்கு அடுத்து அவருக்கு தெலுங்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் வெளியான பிருந்தாவனம் திரைப்படம் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. அதன் பிறகு நானி திரைப்படம் செம ஹிட் அடித்தது. தமிழிலும் வெளியான இந்த படம் சமந்தாவிற்கு பெயரையும், புகழையும் அள்ளித் தந்தது.
சினிமா என்றாலே நடிகர்கள் கிசுகிசுக்கப்படுவது சகஜம் தானே. அதேபோல சமந்தாவும், சித்தார்த் உடன் கிசுகிசுக்கப்பட்டார். எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே வந்தனர். அவர்கள் திருமணம் செய்யப்போவதாகவும் வலைத்தளங்களில் வெளியானது. சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்த நிலையில் சமந்தா தனது கேரியரில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.
பல முன்னணி நடிகர்களுடன் இணைந்தும் நடித்தார். சமந்தாவிற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம் என்றே சொல்லலாம். 2018 இல் தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா அதன் பிறகும் பல படங்களில் நடித்தார்.
மேலும் திருமணத்திற்கு பிறகும் அவரது மார்க்கெட் குறையவில்லை என்றே சொல்லலாம். தற்போது ஹாட்டான பல புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் சமந்தா கிளோசப்பில் போட்டோஷூட் செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.