அடி மேல் அடி வாங்கும் சமந்தா.. நட்ட நடு ராத்திரியில் வெளியான இன்ஸ்டா பதிவு – குழம்பிய ரசிகர்கள்!

0
அடி மேல் அடி வாங்கும் சமந்தா.. நட்ட நடு ராத்திரியில் வெளியான இன்ஸ்டா பதிவு - குழம்பிய ரசிகர்கள்!

இந்திய சினிமாவில் தற்போது அதிக முக்கியத்துவம் பெறும் நடிகைகளில் ஒருவர் சமந்தா. சாதாரண ஒரு குணச்சித்திர நடிகையாக தன் சினிமா பயணத்தை ஆரம்பித்த சமந்தா தற்போது முக்கிய நாயகிகளில் ஒருவராக மாறியுள்ளார். தன் விவகாரத்திற்கு பிறகும் கூட அசுர வேகத்தில் தன் கேரியரில் வளர்ந்து வருகிறார்.

மேலும் ஹாலிவுட் சினிமாவிலும் தன் கால் தடத்தை பதித்துள்ளார் சமந்தா. இவரின் யசோதா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி ரிலீசாக உள்ளது. மேலும் இவரை இன்ஸ்டாவில் மட்டுமே மில்லியன் கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.இந்நிலையில் நேற்று இரவு சம்பந்தமே இல்லாத ஒரு நபரின் புகைப்படம் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. சமந்தாவின் ரசிகர்களோ யார் இவர்.. ஒரு வேளை ஹேக்கர்கள் சமந்தாவின் இன்ஸ்டா பக்கத்தை முடக்கிவிட்டனரோ என குழம்பினர்.

பின்னர் இதுகுறித்து சமந்தாவின் மேனேஜர் விளக்கமளித்துள்ளார். மேலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த பதிவு தவறுதலாக பதிவாகி உள்ளது என்றும், பின்னர் அது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் அவர் கூறி இருந்தார். திடீரென அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் புகைப்படம் சமந்தாவின் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டு இருந்தது சமூகவலைத்தளத்தில் பேசுபொருளாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here