தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாளை முதல் முடி திருத்தும் கடைகளை திறந்து கொள்ளலாம் என முதல்வர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதில் பல்வேறு விதிமுறைகளும் விதிக்கப்பட்டு உள்ளது.
சலூன் கடைகள்:
தமிழகத்தில் மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நான்காம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. இதில் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. 40 நாட்களுக்கு மேலாக முடி திருத்தும் கடைகள் பூட்டப்பட்டு உள்ளதால் வருமானம் இன்றி அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்று நாளை (மே 19) முதல் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் 3 மாதங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு..!
அதன்படி, பெருநகர சென்னை காவல்துறைக்கு உட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், இதர நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர அனைத்து ஊரகப் பகுதிகளிலும் முடி திருத்தும் நிலையங்கள் நாளை (மே 19) முதல் இயங்குவதற்கு முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். மேலும் கையுறை அணிதல், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் மற்றும் ஒரு நாளைக்கு 5 முறை கிருமிநாசினி தெளித்தல் போன்ற விதிகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |