தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்விக்காக தனியார் கல்லூரிகளில் சேர்க்கை ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் மொபைல் எண் மற்றும் சுய விவரங்களை காசு கொடுத்து வாங்க முற்பட்டதாக ஆடியோ ஒன்று இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த ஆடியோவில் “தனியார் கல்லூரி பணியாளர் ஒருவர் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஒருவரிடம் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை பேரம் பேசி மதுரை, திருச்சி உட்பட 20 மாவட்ட மாணவர்களின் விவரங்களை விற்பனை செய்வதாக கூறியுள்ளார். அதேபோல் மற்ற மாவட்ட மாணவர்களின் லிஸ்ட் கிடைக்கும் போது இலவசமாக தகவல் தருவதாகவும் சில சலுகைகளை தெரிவித்துள்ளார்.
Gpay மூலம் பணம் செலுத்தி விட்டு மின்னஞ்சலில் விவரங்களை வாங்கிக்கங்க?” என தொலைபேசியில் பேசி இருக்கிறார். தற்போது இந்த ஆடியோ மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
View this post on Instagram