தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். மேலும் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களை மகிழ்விக்கும் வகையில் தமிழக அரசு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் மொத்தம் 12,105 பகுதி நேர பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியம் இதுவரை ரூபாய் 10 ஆயிரம் ஆக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது இதை உயர்த்தி இனி வரும் நாட்களில் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூபாய் 12500 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.