இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரை பெருமைப்படுத்தும் விதமாக, மும்பை கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சச்சின் டெண்டுல்கர்:
இந்திய ரசிகர்கள் அனைவரும் ஐபிஎல் தொடருக்கான லீக் போட்டிகள், வரும் மார்ச் 31ம் தேதி முதல் மே 21ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரை எதிர்நோக்கி உள்ள இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் குறித்த மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, சச்சினின் சொந்த ஊரான மும்பையில் இவருக்கு சிலை வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும், மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில், ஜாம்பவானான சச்சினுக்கு சிலை வைக்க மும்பை கிரிக்கெட் சங்கத்தின் (எம்சிஏ) தலைவர் அமோல் காலே கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, இவர், வான்கடே மைதானத்தில் இது முதல் சிலையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
கேட்சுகளில் புதிய மைல்கல்லை எட்ட இருக்கும் விராட் கோலி…, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக படைப்பாரா??
இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், சச்சின் பிறந்த நாளான ஏப்ரல் 24 அன்று இவரது சிலை திறப்படும். ஒருவேளை, அதற்குள் பணிகள் முடிவடையவில்லை என்றால், அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள, ஒருநாள் உலக கோப்பை தொடரின் போது, சச்சினின் சிலை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில், இந்திய அணிக்காக, 664 போட்டிகளில் விளையாடி உள்ள இவர், 34,357 ரன்களை குவித்துடன், சதங்களில் 100 அடித்து பல சாதனைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.