100 நாள் பணியாளர்களுக்கு இந்த முறை சாத்தியமில்லை., உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!!

0
100 நாள் பணியாளர்களுக்கு இந்த முறை சாத்தியமில்லை., உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!!
100 நாள் பணியாளர்களுக்கு இந்த முறை சாத்தியமில்லை., உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!!

தமிழகத்தில், 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்க வாய்ப்பில்லை என நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

அரசு பதில்:

மத்திய அரசின் மூலம், இந்திரா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டு, திறம்பட செயல்பட்டு வருகிறது. வருடத்தில் 100 நாட்கள் வேலை அளிக்கும், இத்திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு குவிந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வேலை வாய்ப்பு திட்டத்தில் பல மோசடிகள் நடப்பதாக சமீப காலமாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, 100 நாள் வேலைப் பணியாளர்கள் தனிப்பட்ட விவசாயிகளின் சொந்த நிலங்களில் வேலை செய்ய வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது சார்ந்த வழக்கு விசாரித்த நீதிபதிகள், இந்த பணியாளர்களை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்க முடியுமா? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

தமிழகத்தில் சுமார் 2500 கிராமங்களில் கருணாநிதியின் கனவு திட்டம்., முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!!

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, இதனால் ஆகும் பொருட்செலவு மிக அதிகம் என்பதால் இதனை செயல்படுத்த முடியாது என மறுத்து விட்டது. இதை அடுத்து, இத்திட்டத்தின் முறைகேடுகளை தடுப்பது குறித்து குழு அமைக்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here