தமிழகத்தில் கிராமப்புற, நகர்ப்புற மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. இந்த வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு திட்டங்களில் ஒன்றான “அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்” பயன்பாட்டுக்கு வர உள்ளதாக முதல்வர் மு,க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதன்மூலம் சுமார் 2,544 கிராமங்களில் கான்கிரீட் சாலை, தெரு விளக்கு, இடுகாடு, சுடுகாடு, குடிநீர், விளையாட்டு, கிராம அங்காடி, நூலகம் என பல்வேறு அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் இத்திட்டம் முறையாக செயல்படுகிறதா? என்பதை கண்காணிக்க தலைமை செயலாளர் தலைமையில் 18 முதன்மை செயலாளர்கள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிக்கு திடீர் விடுமுறை., தீ விபத்து காரணமாக நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!!
இதன்படி இத்திட்டத்திற்கு ரூ.1,155 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.