தனியார் பள்ளிக்கு திடீர் விடுமுறை., தீ விபத்து காரணமாக நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

0
தனியார் பள்ளிக்கு திடீர் விடுமுறை., தீ விபத்து காரணமாக நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!!
தனியார் பள்ளிக்கு திடீர் விடுமுறை., தீ விபத்து காரணமாக நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

கன்னியாகுமரி மாவட்டம், வலம்புரி விளை பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு விடுமுறை:

மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு இயற்கை பேரிடர்கள் மற்றும் முக்கிய தலைவர் தினங்கள் போன்ற நாட்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த விடுமுறை ஈடுகட்டும் பொருட்டு வேறொரு நாள் பணி நாளாக மாற்றப்படும். அந்த வகையில் தற்போது தமிழக முழுவதும் ஆண்டு இறுதி பொதுத் தேர்வுக்கு மாணவர்களை, ஆசிரியர்கள் தீவிரமாக தயார் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே உள்ள வலம்புரி விளை பகுதியின் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் சுமார் 5 லட்சம் புதிய ரேஷன் கார்டு., அரசின் அதிரடி நடவடிக்கை!!!

தீ கொழுந்து விட்டு எரிந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதால், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடி வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here