தமிழகத்தில் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மலிவு விலையில் உணவு பொருட்களும், அவ்வப்போது இலவச பரிசுகளும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே இதற்காக மக்கள் அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் எளிய முறையில் https://www.tnpds.gov.in/ என்ற இணையத்தளம் மூலமாக விண்ணப்பங்களை வழங்கப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதன்மூலம் 2022-23 நிதியாண்டில் சுமார் 4.88 லட்ச விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்பட்டுள்ளது என உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது. இவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்து கடந்த பிப்ரவரி 5ம் தேதி வரை 3.06 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் அட்டை விநியோகம் செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும் போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் தகுதியற்றவர்களாக கருதி 22 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.