மகள் செய்து கொடுத்த பீட்ருட் கபாப் – 60 நொடியில் காலி பண்ணிய சச்சின் டெண்டுல்கர்..!

0

கொரோனா வைரஸ் தாக்கத்தால் வீடுகளுக்குள் முடங்கி உள்ள அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் பொழுதை போக்கி வருகின்றனர். அவ்வாறு வீட்டில் உள்ள சச்சின் டெண்டுல்கருக்கு அவரது மகள் சாரா சுவையான சாலட், பீட்ருட் கபாப் செய்து கொடுத்து அசத்தி வருகிறார்.

சச்சின் நன்கொடை:

இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கொரோனா தாக்கம் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மஹாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் வழங்கி உள்ளார். மேலும் மாதந்தோறும் 5000 பேருக்கு உணவு அளிப்பதாகவும் அவர் உறுதிபட தெரிவித்து உள்ளார். ஊரடங்கால் வீட்டில் குடும்பத்தினருடன் இனிமையாக பொழுதை போக்கி வருகிறார் சச்சின்.

சாரா டெண்டுல்கர்:

சச்சின் தனது மகள் சாரா டெண்டுல்கர் செய்து கொடுத்த பீட்ருட் கபாப் போட்டோவை இணையத்தில் பதிவிட்டு உள்ளார். அது 60 நொடிகளில் காலியாகி விட்டதாகவும் சச்சின் கூறியுள்ளார். மேலும் சாரா செய்துகொடுத்த தபூலே சாலட் உணவையும் ஒரு வெட்டு வெட்டியுள்ளார் சச்சின். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here