நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இன்னொரு பக்கம் அரசும் அவ்வப்போது ஊதியம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் மதராச மதரஸா ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது அதாவது மதரஸா ஆசிரியர் நலத்திட்டத்தில் ஐந்து ஆண்டுகள் முடித்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை மட்டுமே மாநிலத்தில் 313 ஆசிரியர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு இதுவரை ஓய்வூதியமாக ரூபாய் 1500 வழங்கப்பட்டு வருகிறது. இதை உயர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதனால் மீண்டும் நடைபெறவுள்ள க்ஷேமேனிதி வாரிய கூட்டத்தில் ஓய்வூதியம் குறித்து விவாதம் செய்யப்படும். இந்த விவாதத்தின் முடிவு 1500 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரூபாய் 1600 ஆக உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.