நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களும் ஒவ்வொரு ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் புனித வெள்ளி மற்றும் ஹோலி பண்டிகைக்கு பொது விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிட்டனர். அதன்படி மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளி கொண்டாடப்பட உள்ளது. ஆனால் இந்த நாளில் 7ம் வகுப்புக்கான ஆண்டு தேர்வை நடத்த தேர்வு துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து பலரும் இந்த தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
தற்போது இதைத்தொடர்ந்து அரசு ஆசிரியர்களுக்கு வருடம் தோறும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது ஹோலி பண்டிகையின் போது ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக இப்போது தேஜஸ்வி யாதவ் முதல்வருக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது மாநிலம் முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடும் போது ஆசிரியர்கள் மட்டும் குடும்பத்தை விட்டு பணியில் இருப்பார்கள். ஆனால் இந்த வருடம் அவர்களுக்கு விடுமுறை வழங்க முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.