உலகில் அங்கீகரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியாக இது இருக்கும் என்று ரஷ்யா நம்புகிறது. இந்த ஆண்டு 20 கோடி அளவிலான கொரோனா வைரஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்ய நாடு இலக்கு வைத்துள்ளது.
முதல் கொரோனா தடுப்பூசியாக இருக்கும்..!
ரஷியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 6,428 புதிய பாதிப்புகள் பாதிக்கப்பட்டதை அடுத்து ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 7.5 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்த ஆண்டு உள்நாட்டில் 30 மில்லியன் டோஸ் பரிசோதனையான COVID-19 தடுப்பூசியை உற்பத்தி செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது. மேலும் 170 மில்லியன் டோஸை வெளிநாடுகளில் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது என்று நாட்டின் இறையாண்மை செல்வ நிதியத்தின் தலைவர் தெரிவித்தார். தடுப்பூசியின் முதல் மனித சோதனை, 38 பேர் மீது ஒரு மாத கால சோதனை, இந்த வாரம் முடிந்தது. ஆராய்ச்சியாளர்கள் இது பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது மற்றும் நோய்யெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது என்று முடிவு செய்தனர் இருப்பினும் அந்த பதிலின் வலிமை இன்னும் தெளிவாக இல்லை.
ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி – இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!!
ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் ஆர்.டி.ஐ.எஃப் தலைவர் கிரில் டிமிட்ரிவ் ஆகஸ்ட் மாதத்தில் பல ஆயிரம் பேர் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய கட்ட சோதனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய முடிவுகளின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவிலும் செப்டம்பர் மாதத்தில் வேறு சில நாடுகளிலும் இது அங்கீகரிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இது உலகில் அங்கீகரிக்கப்பட்ட முதல் தடுப்பூசியாக மாறும் என்று அவர் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
ரஷ்ய கட்டம் மூன்றாம் சோதனை ரஷ்யா மற்றும் இரண்டு மத்திய கிழக்கு நாடுகளில் நடத்தப்படும் என்று டிமிட்ரிவ் கூறினார், ஆகஸ்ட் 3 ஆம் தேதி சிறிய, 100 நபர்கள் கொண்ட இரண்டாம் கட்ட சோதனை முடிவடைந்த பின்னர் தொடங்கும்.