இங்கிலாந்து அணி வீரர் அர்ச்சர் போட்டியின் விதிகளை மீறியதற்காக வெளியேற்றப்பட்டுஉள்ளது ரசிகர்கள் மதில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பரவல்:
உலக நாடுகள் அணைத்து கொரோனா பரவலால் தவித்து வருகிறது. இந்த நிலையில், இங்கிலாந்தில் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படுகின்றனர். தகுந்த பாதுகாப்புடன், போட்டிகள் நடத்த படுகின்றனர். வீரர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே விளையாட அனுமதிக்கபடுகின்றனர்.
இப்படியாக, இங்கிலாந்து அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் 1 டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. தற்போது இந்த இரு அணிகளுக்கான அடுத்த டெஸ்ட் போட்டி மான்சஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராப்போர்டு மைதானத்தில் நடக்க உள்ளது.
இங்கிலாந்து வீரர் வெளியேற்றம்:
இப்படியிருக்க, இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் போட்டியில் இருந்து வெளியேற்றபட்டு உள்ளார். அவர் தகுந்த மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் சார்பில் விலக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் அவர் 5 நாட்கள் தனிமைபடுத்தப்படுவர், மற்றும் அவருக்கு 2 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபடும் என்று கூறப்பட்டு உள்ளது. அவரின் தனிமை காலம் முடிவதற்குள் கொரோனா பரிசோதனையில் நெகடிவ் வந்தால் விளையாடலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.
தற்போது இங்கிலாந்து அணியுடன் ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டாசில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று அந்த அணியின் கேப்டன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.