போக்குவரத்து நெரிசலை குறைக்க மாஸ் திட்டம்…, மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு இதோ!!

0
சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பர்வத் மாலா பரியோஜனா என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமார் 200 ரோப்வே சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
அதாவது, ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பீட்டில் மலைப்பாங்கான இடங்களில் சுமார் 1,200 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய கயிறு பாதையான ரோப்வே சாலைகளை அடுத்த 5 ஆண்டுகளில் அமைக்கப்படும் என்று நிதின் கட்காரி அறிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்திற்கு அதிக செலவாகும் என்பதால் தனியார் மற்றும் பொது கூட்டு நிறுவனங்கள் மூலமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், சுற்றுலா வளர்ச்சி அதிகரிப்பதுடன் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here